Monday, 4 November 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்!


இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன.


தற்போது Android, Apple iOS, Windows Phone 8, Blackberry போன்ற இயங்குதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் அதிகமான செயல்திறன் கொண்ட Processor, Camera, Network போன்ற பல வகையான சிறப்பம்சங்கள் கொண்ட கருவிகளில் சிறப்பான ஒன்றை வாங்குவது என்பது புதியவர்களுக்கு சிரமமான காரியமே. இதற்காக நமக்கு உதவும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.

 1.GeekaPhone.com


Compare Smartphone Specifications Online

எளிமையான தோற்றத்தை உடைய இத்தளத்தில் காட்டபடும் போன்களை தேர்வு செய்து ஒப்பிடலாம். இதில் மொபைல்களின் அனைத்து விவரங்களான display, processor, camera, video, battery, music போன்றவற்றை ஒரே பக்கத்தில் ஒப்பிடலாம். ஒரே நேரத்தில் 5 மொபைல்களை ஒப்பீடு செய்ய முடியும். மேலும் Popular Comparison களும் இருக்கின்றன.

2.PhoneRocket.com



Compare Smartphone Specifications Online

இந்த தளத்தில் அனைத்து Specifications களுடன் Difference, Benchmarks, Reviews போன்றவையும் அவற்றிற்கான மதிப்பெண்களும் இடம்பெறுகின்றன. மேலும் ஒவ்வொரு வசதியிலும் சிறப்பான மொபைல்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உதாரணமாக Most Processing Power, Fastest Web Browser, Fastest 3D and 2D Graphics, Longest Battery Life போன்றவற்றில் சிறப்பான மொபைல்களை தனித்தனியாக பார்க்கலாம்.

இத்தளம் தான் எனக்கு சிறப்பாகத் தோன்றுகிறது. மேலும் அடுத்து வரும் தளங்கள் அனைத்தும் இவர்களின் நெட்வொர்க் தான். கண்டிப்பாக ஒரு முறை பார்த்து விடுங்கள்.

3. TabletRocket.com

Compare Tablet Specifications Online

இந்த தளத்தில் அனைத்து வகையான டேப்ளட்களை ஒப்பீட முடியும். மேற்கண்ட மொபைல் ஒப்பிடும் தளம் போல இடைமுகம், வசதிகள் தான் இதிலும். ஆனால் இதில் இயங்குதளங்கள் வாயிலாகவும் குறிப்பிட்ட விலைக்குள் இருக்கும் டேப்ளட்களை Sort செய்து பார்க்கவும் முடியும். ஒவ்வொரு வசதியிலும் Best Tablet களும் பட்டியலிடப்பட்டுள்ளன. நேரடியாக அமேசானில் வாங்கவும் இணைப்பு உள்ளது.

4. CameraRocket.com


Compare Cameras Specifications Online
இதில் எல்லாவகையான புதிய கேமராக்களையும் ஒப்பீட்டுப் பார்க்கலாம். இத்தளத்தில் Best image quality in low light, Highest resolution, Cheapest full frame cameras, Fastest focusing போன்றவற்றில் சிறந்த கேமராக்களை அறிந்து கொள்ள முடியும்.

 5.ReaderRocket.com


Compare E-readers Specifications Online

புத்தகங்கள் படிக்க, ஆன்லைன் வசதிக்கு உதவும் Amazon Kindle போன்ற பலவகையான Reader Device களை ஒப்பிட இத்தளம் உதவுகின்றது. மேலும் இதில்  The best E-Ink readers,Fastest web browser,The best 5" e-readers, The best 6" e-readers போன்ற சிறந்த ரீடர்களை தெரிந்து கொள்ள முடியும்.

'ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனை


பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது.


 tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


இத்தகைய செயல்பாடுகள் மூலம் காரின் சொந்தக்காரரை எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்து,  ஜிபிஎஸ் மூலம் கார் இருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது. அசதி அளவை கணிக்க வேறு புற காரணிகளான வண்டியின் நிலை, வானிலை, தகவல்களை கணிக்கலாம். எதிர்காலத்தில் நபருக்கு நபர் உடல்நலக்குறைவு மற்றும் சிக்னல் வேறுபாடுகளும் ஆய்வு செய்யப்படும். இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தலைவர் டி.துரைசாமி, செயலாளர் டி.தசரதன், இயக்குனர் பா. வெங்கடேஷ்ராஜா, முதல்வர் சுயம்பழகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

வீட்டிலிருந்த படியே சிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!


தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள்,... தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.


சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள் என்ன ?

முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.

தைராய்டு பிரச்சினை

பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.

ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.

பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வீட்டு வைத்தியம்

சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

வாழைத்தண்டு

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

எதை சாப்பிடக்கூடாது?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்!


Photo: பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்  செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .  பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.  வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.  சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்  “ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப் பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும் மின்னே விடுபூ முடி “  சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்  ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும் ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும் பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.  வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்  பகல் நீட்டிப்பை காண வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி டு என்பது ஆனி பூ என்பது ஆடி மு என்பது ஆவணி டி என்பது புரட்டாசி இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்  மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை  வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே வ = 1/4 நாழிகை வா= 1/4 நாழிகை வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம் இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது  ~பகல் நீட்டிப்பு~  வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம் ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம் ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்  ~இரவு நீடிப்பு~  கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம் மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம் மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம் பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்  நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.  தமிழ் திங்கள் (மாதம்) “““““““““““““““` பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக வழங்கி வந்தன.  அவை:–  மேழம் (சித்திரை) விடை (வைகாசி) ஆடவை (ஆனி) கடகம் (ஆடி) மடங்கல் (ஆவணி) கன்னி (புரட்டாசி) துலாம் (ஐப்பசி) நளி (கார்த்திகை) சிலை (மார்கழி) சுறவம் (தை) கும்பம் (மாசி) மீனம் (பங்குனி)  இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.  தகவல் - இணையம்

 பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்


செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .


பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர்... . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.


வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.



சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்



“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


 
சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்.


பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.



வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண


வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் 


வி என்பது வைகாசி
 

டு என்பது ஆனி
 

பூ என்பது ஆடி
 

மு என்பது ஆவணி
 

டி என்பது புரட்டாசி
 

இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
 
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை

வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
 

வ = 1/4 நாழிகை
 

வா= 1/4 நாழிகை
 

வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 
நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்
 

இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது
 

~பகல் நீட்டிப்பு~

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
 

ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
 

ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
 

~இரவு நீடிப்பு~

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்


மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
 

மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

 

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

தமிழ் திங்கள் (மாதம்)


“““““““““““““““`
 

பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.

அவை:–

மேழம் (சித்திரை)


விடை (வைகாசி)


ஆடவை (ஆனி)


கடகம் (ஆடி)


மடங்கல் (ஆவணி)
 

கன்னி (புரட்டாசி)
 

துலாம் (ஐப்பசி)
 

நளி (கார்த்திகை)
 

சிலை (மார்கழி)
 

சுறவம் (தை)
 

கும்பம் (மாசி)
 

மீனம் (பங்குனி)
 

இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

வடதுருவம் போறீங்களா?

வாழ்க்கையில் வாய்ப்பு கிடைத்தால்... ஒரு முறை அண்டார்டிகாவையும், ஆர்க்டிக் கடல் பிரதேசத்தையும் கண்டுகளித்து விட வேண்டும். அப்போதுதான் இயற்கையின் வித்தியாசமான பரிமாணத்தை நம்மால் உணர இயலும்.

 அதிலும் ஆர்க்டிக் கடல் தனியாக செல்ல இயலாத பூமி...

 நார்வே நாட்டிற்கு சென்று அங்குள்ள பெர்ஜின் பகுதியை அடைந்து அங்கிருந்து கப்பலில் 12 நாள் பயணம் செய்ய வேண்டும். பயணத்தின்போது 5 நாட்களுக்கு மொபைல்... இன்டர்நெட் என எதுவும் வேலை செய்யாது. அதனால் தொடர்பு நோசான்ஸ்!

 கம்பூட்... கைகிளவுஸ், மாத்திரை மருந்துகள்.. குளிர் புகாத அளவில் உள்ள ஆடைகள்... குளிர்ந்த பகுதியை அடையும்போது விறைத்துப் போகாமல் இருக்க 5 ஆடைகளை ஒன்றின் மீது ஒன்று அணியும் நிலையும் வரலாம். வடதுருவத்தில் எத்தனை தூரம் செல்ல அனுமதி உண்டோ அத்தனை தூரம் வரை இந்த கப்பல் அழைத்துச்
 செல்லும்!

 பிரும்மாண்ட பனிப்பாறைகளை நாம் கேள்விப்பட்டிருக்கலாம்! அதேபோன்று கடல் மட்டத்திற்காக ஈடாக மிதந்து செல்லும் ஐஸ் தகடுகள் ஆச்சரியமானவை.. காட்டிற்குச் சென்றால் மிருகங்களை எப்படி நம் கண்கள் தேடுமோ, அதேபோன்று இங்கு கடல் சிங்கம் மற்றும் பனிக் கரடிகளைத் தேடுவோம். இந்த ஐந்து நாட்களும் தூக்கம் கிடையாது. இதற்கு முதற் காரணம். இருட்டே வராது. அடுத்து எந்த நிமிடமும் நாம் ஏதாவது அதிசயத்தை காண வேண்டி வரலாம் என்ற ஆர்வமே முக்கிய காரணமாம்.

 மொத்த பயணம் 12 நாட்கள்! 40 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தை உணரும் இடங்களில் உடம்பு நடுங்கும். சில இடங்களில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் குளிர் காற்று வீசும்... இங்கு நீள திமிங்கலத்தை காணும் வாய்ப்பு கிட்டலாம். ஸ்குவாஸ் என்ற அபூர்வ புத்திசாலிப் பறவையைக் காணலாம். நடுவில் நடைபாதைப் பயணமும் உண்டு. ரெயின்டீரில் பயணமும் உண்டு. மார்ஸ் கிரகம் இருக்கட்டும். முதலில் ஆர்க்டிக் சென்று வித்தியாசத்தை அனுபவியுங்க.

 நார்வே ஆஸ்லோ நகரில் உள்ள நேஷனல் ஜியோகிராபிக் சுற்றுலா கப்பல் மூலமும் ஆர்க்டிக் கடலுக்கு சென்று வரலாம்.

 சூரியனை அறவே மறைக்கும் மற்றும் பொதுவான கூலிங் கிளாஸ்கள் கட்டாயம் தேவை. இல்லாவிடில் வெள்ளை வெளேர் பூமி. நம் கண்களைச் சில நிமிடங்களிலேயே எரிய வைத்து விடும்...

 கேமிராவுடன் எடுத்துச் செல்லப்படும் பேட்டரி, கடும் பனியினால், வேலை செய்யாமல் போகலாம். ஆக இவற்றுடன் பேக் அப் பேட்டரியும் எடுத்துச் செல்ல வேண்டும்.
 மொத்த 12 நாட்களில் குறைந்தது 5 நாட்கள் முழுமையாகத் தொலைதொடர்பு வசதிகள் கிடையாது. ஆக தொடர்பு கொள்ள மாட்டேன் என்று வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிடவும்.

 சீதோஷ்ண நிலை, எதிர்பார்த்துச் செல்வதை விட, சில நேரங்களில் மேலும் கடுமையாக மாறலாம்.. கடும் குளிர் வீசலாம். கடல் பிராணிகளினால் எதிர்பாராத தாக்குதல்கள் நடக்கலாம். ஆனால் இவற்றை எதிர்கொண்டு, அதேசமயம் வித்தியாசமான அனுபவத்தை பெற உடனே புறப்படுங்க.

‘மனித-கணினி’ - சகுந்தலா தேவி!

Shakuntala Devi 

சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 04, 1939

இடம்: பெங்களூர், கர்நாடகா

இறப்பு: ஏப்ரல் 21, 2013

பணி: கணிதமேதை, ஜோதிடர் 

நாட்டுரிமை: இந்தியா

பாலினம்: பெண்

பிறப்பு: 

இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

சகுந்தலா தேவியின் கணிதத் திறமை:

சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:

தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

‘புக் நம்பர்ஸ்’,

‘பெர்ஃபெக்ட் மர்டர்’,


‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,


‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,


‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’


போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.

இறப்பு

சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.

‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.