Saturday, 4 January 2014

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உறவுகள் வேண்டுமே!





வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உறவுகள் வேண்டுமே!



1.வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்களது உறவுப் பாலத்தை எப்படி காப்பாற்றி வைக்கலாம் ?நாம் நமது பிறப்பிடத்தை விட்டு வெளிநாடு சென்று வாழ்ந்தாலும் நமது வாழ்க்கை என்னவோ நமது சொந்த ஊரில் உறவுகளை தொடர்ச்சியாக வைத்திருப்பதில் தான் சந்தோசம் இருக்கின்றது.
                                                                        
                    
2.பொதுவாக நாம் பிறந்த ஊரில் நாம் ஒரு சில வருடங்கள் இல்லையென்றால் அந்த சமூகம் நம்மை மறக்க ஆரம்பித்துவிடும் .நம்மால் ஏதாவது நண்மை ஏற்படும் என்றால் நம்மை தொடரும் ,இல்லையென்றால் நாம் அந்த ஊரில் இருந்திருந்ததையே மறந்து விடும்.ஒரு சொற்ப எண்ணிக்கையில் தான் நமது தொடர்பு இருக்கும்,ஒரு சில உறவுகள் ஒரு சில நண்பர்கள் என்று அந்த வட்டம் குறுகி விடும்.
                             
    
 3. இவர்களையெல்லாம் நாம் முழுவதுமாக ஒதுக்கி விட்டு வாழ முடியாது ,பிறப்பு,இறப்பு,திருமணம் போன்ற தருணங்களில் உறவுகளும் ,நண்பர்களும் இல்லாவிட்டால் நமது வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும்.
                    
                         
4. முதலில் நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட முக்கியமான உறவுகள் ,நண்பர்கள் எவரையும் கால ஓட்டத்தில் நாம் இழந்து விடாது,அவர்களது வாழ்க்கை நிலையை நாம் தொடர்ச்சியாக அறிந்து கொள்ள வேண்டும் முடிந்த அளவிற்கு தொலை பேசி மூலமாக அவர்களது வாழ்க்கை நிலைகளை ,நல்லது ,கெட்டதுகளை தெரிந்து கொண்டே வரவேண்டும் .


5.அவர்களது வாழ்க்கையில் ,கல்வியில்,தொழிலிள் ,வேறு ஏதேனும் ஒன்றில் அவர்களுக்கு நம்மால் முடிந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கலாம்,உதவிகள் செய்யலாம்.இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள நபர்கள் தான் நமது வாழ்க்கை என்பதை உணர வேண்டும் .நாம் எங்கு சென்று எவ்வளவு சம்பாதித்து பேரும் புகழும் அடைந்தாலும் சொந்த ஊரில் தான்  நமது வாழ்க்கை நீண்டகாலம் பேசப்படும் .மற்றைய ஊர்களில் நாம் பெறும் பேரும் செல்வமும் நீண்ட காலங்கள் பேசப்படாது.


6. ஆகவே இன்று முதல் முதலில் நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட முக்கிய உறவுகளும்,நண்பர்களும் மறந்து விடாமல் இருக்க அவர்களது தொடர்பை பாதுகாத்திடுவோம்.வெளிநாட்டிலும் சொந்த ஊரிலும் புகழடைவோம்.

மரணத்தின் மறுபக்கம்...!




எனக்கும் மரணத்தைப் பற்றிப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம்.  பிறப்பு இயற்கை என்பது போல இறப்பும் இயற்கையே.  என்னைப் பொறுத்தவரையில், மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே.  மரணம் என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு நிலையை விடுத்து அடுத்த நிலைக்குச் செல்வதாகும்.  எமது வாழ்வின் விளைவாகவே எமது மரணமும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  எமது வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமைகளிலேயே அது தங்கியிருக்கும்.

  எமது வாழ்வு எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதோ அதேபோல் மரணத்தின்போதான மரணத்தின் பின்னான அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதைக் கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.  எமது வாழ்வில் நாம் செய்யாத கடமைகள் இருப்பின், மரணத்தின் பின்பும் நாம் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்போம் அல்லது மீண்டும் பிறப்பெடுப்போம்.  எமது பிறப்புகளில் நாம் செய்யும் நன்மை, தீமைகள் எமது கடைசிப் பிறப்புவரை தொடரும்.   நாம் பிரபஞ்சத்தின் Cycleஐ முடிக்கும்வரை எமது பிறப்புகளும் தொடரும்.

இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களாலும் இயக்கப்படுகிறது.  பிரபஞ்சத்திலிருக்கும் ஐம்பூதங்களும் எமது உடலுக்குள்ளும் உள்ளது.  இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறதோ அதைப்போலவே எமது உடலும் ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறது.  இவ் ஐம்பூதங்களை எம்மாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

 இவ் ஐம்பூதங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான் சித்தர்களும் முனிவர்களும்.  சித்தர்கள், முனிவர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள்.  ஆனால், அதனை ஏற்க மறுத்த, விளங்கிக் கொள்ள முடியாத மேற்கத்தேயர்கள் இவர்களின் சித்தாந்தங்களை வேண்டுமென்றே மறைத்தனர், மறுத்தனர்.  எமது சித்தாத்தங்களில் சொல்லாத விடயமே இல்லை என்று சொல்லலாம்.

நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்போம்.  ஆகவே, இறப்பு என்பதும் அதன் பின்னான நிகழ்வுகளும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே.  எமது வாழ்விற்கு எவ்வாறு நிகழ்வு நிலைகள் இருக்கின்றனவோ அதேபோல்தான் மரணத்திற்கும் அதற்குப் பின்னரும் உண்டு.

  சுனாமியின்போதும், இயற்கையாக நடைபெறும் அனர்த்தங்களின்போதும் விலங்குகள் தப்பி விடுகின்றன.  மனிதன்தான் அதிகம் இழப்புகளைச் சந்திக்கின்றான்.  இதற்குக் காரணம் நாம் உள்ளுணர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை.  இவ்வாற்றல்கள் எமக்கு இருப்பதாகவே நாம் நினைப்பதில்லை.  (We don’t sense them). முயற்சி செய்தால் இச்சக்திகளை நாம் மீண்டும் பெறலாம்.

குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல்




முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப் படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.அதிலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?


பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதை நிரூபிக்கின்றன. எனவே, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ரத்த அழுத்த சோதனை நடத்த வேண்டியது அவசியமாகிறது.

குழந்தைகள் மத்தியில் எந்தளவிற்கு உயர் ரத்த அழுத்த சிக்கல்கள் உள்ளன?

இப்பிரச்சினை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 3 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம், 3.6% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது. அதேசமயம், சீனாவைப் பொறுத்தவரை, 8 முதல் 17 வயது வரையிலான பள்ளி குழந்தைகளிடம் 17.4% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது.

குழந்தைகளிடம் ரத்த அழுத்த சோதனை நடத்தவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

உயர் ரத்த அழுத்த பிரச்சினைக் கொண்ட 75% குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன்மூலம், அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இதயம் மற்றும் ரத்த நாளம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகின்றனர். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள ஒருவர், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் இதய நோய் ஆகியவை தாக்குவதற்கான அதிகபட்ச ஆபத்தில் இருக்கிறார்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, முறையான கவனிப்பிற்கு உட்படுத்தப்படாவிட்டால், மூளை வீக்கம், குழப்பம், கோமா, தீவிர தலைவலி மற்றும் குருட்டுத் தன்மை உள்ளிட்ட மோசமான நிலைகளுக்கு ஆட்படும் ஆபத்து உள்ளது. எனவே, ஆண்டிற்கு ஒரு முறையாகினும், குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை அதிகரிக்க காரணங்கள் என்ன?

இன்றைய சமூகத்தில், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் பல விரும்பத்தகாத அம்சங்கள் இருப்பதே அதற்கு காரணம். உதாரணமாக, அதிகமாக தொலைக்காட்சிப் பார்த்தல், கணினி முன்பாக அதிகநேரம் செலவழித்தல், வீடியோ கேம் விளையாடுதல், ஜங்க் உணவுகளை உண்ணுதல் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பானங்களைப் பருகுதல் உள்ளிட்ட பல பழக்கவழக்கங்களால், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

அதேசமயம், தேவைக்கும் குறைவான உடலியக்கம், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்யாமை, உடல் சார்ந்த விளையாட்டுக்களுக்கு வாய்ப்பில்லாமை உள்ளிட்ட அம்சங்கள் ஒரு குழந்தை குண்டாவதற்கு மட்டுமல்ல, அக்குழந்தை உயர் ரத்த அழுத்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் காரணமாகின்றன.

குழந்தைகளின் உயர் ரத்த அழுத்த சிக்கலைத் தீர்க்க கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள், நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஜங்க் உணவு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.

காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தவறவிடாமல், சரியான நேரத்தில உண்ண வேண்டும். அதுபோல், அதிகநேரம் தொலைக்காட்சி முன்பாகவோ அல்லது கணினி முன்பாகவோ அமரக்கூடாது. தேவையான அளவிற்கு விளையாட வேண்டும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், இரவில் நெடுநேரம் கண்விழிக்காமல், தினமும் தேவையான அளவு தூங்க வேண்டும்.

குழந்தைகளுக்கான நார்மல் ரத்த அழுத்தம் என்பது என்ன?

பெரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் நார்மல் ரத்த அழுத்த அளவு 120/80 mm Hg) என்பதாக இருக்கும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை, நார்மல் ரத்த அழுத்தம் என்பது, வயது, பாலினம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

எனவே, இதற்கென்று குறிப்பிட்ட அளவீட்டை நிர்ணயிக்க முடியாது. குழந்தையின் ரத்த அழுத்தத்தை அளவிடும் மருத்துவர், அதை reference table -க்கு பொருத்திப் பார்த்து, அது நார்மலா அல்லது அசாதாரணமானதா என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த ஒப்பீட்டின்போது, 95% விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தமாக கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு 5 வயது குழந்தையின் உயரம் 95% விழுக்காட்டில் இருந்தால், 104/65 mm Hg என்பதற்கு மேலான மதிப்பு உயர் ரத்த அழுத்தமாக கருதப்படும்.

குழந்தைகளிடம் நிலவும் மாறுப்பட்ட ரத்த அழுத்த நிலைகள் யாவை?

குழந்தைகளிடம் முதல் நிலையிலான அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்தம் இருக்கும். இதற்கென பின்னணி உடல் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அதேசமயம், சிறுநீரக மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறியாகவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருக்கலாம்.

முன்பு, குழந்தைகளிடம் இருக்கும் அனைத்து உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளும் இரண்டாம் நிலையிலானவை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நடைபெற்றுவரும் பல ஆராய்ச்சிகளின் விளைவாக, முதல்நிலை அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகள், இதுவரை பெரியவர்களிடம் மட்டுமே இருந்தவை.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் யாவை?

உடல் பருமன், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள். ஒரு குழந்தையிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறதென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான உகந்த கரம்(hand) எது?

வலது கரம், ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான சரியான உறுப்பாகும். இடது கையில் ரத்த அழுத்தத்தை சோதனை செய்தால், இதய நோய் அறிகுறியை கண்டறிவதில் சிக்கல் ஏற்படலாம். ஏனெனில், இடது கை அழுத்தம் குறைவாக இருக்கும்.

White- Coat உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஒரு குழந்தைக்கு, மருத்துவமனை அல்லது மருத்துவரின் கிளீனிக் ஆகிய இடங்களில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அதேசமயம், வீட்டில் அவரின் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால், அந்த நிலைக்குப் பெயர் White- Coat Hypertension.

இந்தநிலை, மாறுபடும் மனநிலை அழுத்தம் காரணமாக ஏற்படுவதாகும். இந்த White- Coat Hypertension என்பது தீங்கு தரும் ஒன்றல்ல. எனவே, ஒரு குழந்தை White- Coat Hypertension சிக்கலைக் கொண்டிருந்தால், அதை நினைத்து பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அதனால் எந்த தீங்கும் ஏற்படாது.

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…




சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?



உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?
உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

கைரேகை பலன்கள்:
பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும்.

 ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும்.

ஓர் ஆடவரின் இடக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார் என்பது எமது அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.

 மிகவும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும், பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.

விதி ரேகை:
உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை ( அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது.

 விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதயரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.

ஆயுள் ரேகை:

ரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். முதலில் இதன் தன்மையைக் கவனிக்க வேண்டும். இந்த ரேகை சிலரது கைகளில் தடிமனாகவும். ஆழமாகவும் பதிந்திருக்கும்; சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

 தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். அடுத்து, ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை, சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதை இது குறிக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர்.

ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும்.

 

புத்தி ரேகை:

குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை ஓரளவு அழுத்தமாகவும், தெளிவாகவும் , மெல்லியதாகவும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போன்ற குறைபாடுகள் இல்லாது அமைவது நல்ல அமைப்பாகும். இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாகவும் இருப்பர்.

 புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால், இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது! உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இனி, புத்தி ரேகையின் பலவிதமான அமைப்புகளையும், அவை தரும் பலாபலன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆரோக்கிய ரேகை:

ஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். ஒருவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.

மேலும், புதன் மேடு பலவீனமாக இருக்க, இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இந்த ரேகை அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை ë£னம், வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.

இருதய ரேகை:

உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; (அ) கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம்.

 இந்த இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

உறவுகளின் இணைப்பை விரிவுபடுத்துவோம்.!



இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பேர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உறவைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களில் பலர் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகள் எடுக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மனிதன் மனிதனாக இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம்.

தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கின்றன. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக இருக்கின்றனவா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே

பதில் வரும். இவை தவிர, தொழில்முறை உறவுகளும் உள்ளன. ஆனால், இந்த உறவுகளும் இப்போது பணத்துக்காகவும் பரஸ்பர தேவையின் அடிப்படையிலும் மட்டுமே செயல்பட்டு வருவதே உண்மை.

முன்பெல்லாம் உறவுகளில் ஏதேனும் நல்ல காரியங்கள் நடந்தாலும், துக்க காரியங்கள் நடந்தாலும் வண்டி கட்டிக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் சென்ற காலம் உண்டு. ஆனால், இப்போது ஒருவர் காலமாகிவிட்ட தகவல் கிடைத்தால் “ஆர்ஐபி’ (ரெஸ்ட் இன் பீஸ்) என்று குறுந்தகவல் அனுப்புவதைப் பார்க்கிறோம். பிறந்த நாள் விழா குறித்த தகவல் கிடைத்தால் பலர் தேடிப்பிடித்து “பொம்மை’, “பூங்கொத்து’ படங்களை குறுந்தகவல் செய்தியில் இணைத்து வாழ்த்து அனுப்பிவிட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இது தொழில்நுட்ப புரட்சியின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

உறவினர்கள், நண்பர்கள் பேசிக் கொள்வதும் சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. உறவுகளும், நட்புகளும் இன்பம் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வது அரிதாகி வருகிறது. இதனால், உறவு, நட்பு வலுவிழந்து விடுகிறது. இது நாளடைவில் தொலைந்தும்விடும்.

தனி மரம் தோப்பாக முடியாது. மனிதனுக்கு உறவுகள் மிகவும் அவசியம். உற்றார், உறவினர்கள் இல்லாமல் வாழ்வு இல்லையே. அப்படிப்பட்ட உறவினர்களும், நண்பர்களும் உண்மையானவர்களாக இருந்தால்தானே மனிதனின் வாழ்வு செழுமை பெறும்.

உறவில் வாழும் போது நல்ல முன்மாதிரியாக இருப்பது மிகவும் அவசியம். நல்லதொரு முன்மாதிரியைக் கொண்டிருக்காததால்தானே இன்றைய இளைஞர்கள் விளையாட்டு, சின்னத்திரை, வெள்ளித்திரை நாயகர்கள், நாயகிகளை தங்களது முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்குகிறார்கள்.

மேலும், உடன் வாழ்வோர்களின் உறவும் சரிவர இல்லாமல் போவதாலும், நல்ல முன்மாதிரிகள் கிடைக்காமல் இளைஞர்கள் திசை மாறிச் செல்ல நேரிடுகிறது. இதனால், ஒட்டு மொத்த சமுதாயமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இன்பத்தை அனுபவிக்க எத்தனை, எத்தனையோ உறவுகள் கூடும். ஆனால், துன்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு எந்த உறவும் முன்வருவதில்லையே…! அண்ணன், தம்பி உறவுக்கு இலக்கணம் வடித்ததும், துன்பமான நேரத்தில் கை கொடுத்து உதவிய பக்தரை தம்பியாக்கியதும்தான் ராமாயணம் சொல்லும் பாடம். மாமனின் உறவுக்கு கோடிட்ட மகாபாரத்தின் கண்ணன் சொன்ன போதனையான “கீதை’ மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தேசம் மீது பாசம் கொண்ட காந்தியை “தேசத் தந்தை’ என்றுதானே அழைக்கிறோம். நேசம் கொண்ட மாமனிதரை “நேரு மாமா’, அறிவுரை வழங்கிய முதாட்டியை “ஒüவை பாட்டி’ என்கிறோம். அன்புக்கு இலக்கணம் கொடுத்த மாதரசியை “அன்னை தெரசா’ என்றுதானே உலகம் அழைக்கிறது. அருளைப் போதித்துவரும் போதகர்களை “அப்பா’, “சகோதரன்’ என்றே சொல்கிறோம். பணிவிடை செய்யும் பெண்ணை “சகோதரி’ என்கிறோம். இவ்வாறுதான் கற்காலத்திலும், அண்மைக் காலங்களிலும் உறவுகள் விரிந்தன. மனித வாழ்வு சிறக்க, நாடு செழுமை பெற உறவுகள் அவசியமாகிறது.

எனவே, உரசல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கோபத்தைக் குறைத்து, நாக்கை அடக்கி, பகைமை பாராட்டாமல், இனிதான வாழ்கைக்கு உத்தரவாதம் தருவதாக ஒவ்வொருவரும் சபதமேற்போம். உறவுகளின் இணைப்பை, தொடர்பை விரிவுபடுத்துவோம்.

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி....




கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி
கலப்பட பெருங்காயம் சமையல்பெருங்காயம்
வாயுத் தொல்லைக்கு பெருங்காயம்


பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.

கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும்.

பெருங்காயத்திலுள்ள “ஓலியோ ரெஸின்’ மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.

பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.

கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.

கொள்ளுப்பால்---உணவே மருந்து..!





கொள்ளுப்பால்---உணவே மருந்து!

இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

ஆஷஸ்: ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து தள்ளாடுகிறது




ஆஷஸ்: ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து தள்ளாடுகிறது:-

வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சொந்த ஊரில் சதம் அடித்தார்,மேலும் பிராட் ஹாடின் பேட்டிங்கில் இங்கிலாந்து தள்ளாடுகிறது.

கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் போர்த்விக், ரேங்கின், பிளான்ஸ் ஆகிய 3 பேர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் கூக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் வார்னர் 16 ரன்னிலும், ரோஜர்ஸ் 11 ரன்னிலும் போல்டு ஆகி வெளியேறினர். கேப்டன் கிளார்க் 10 ரன்னில் அவுட் ஆனார். வாட்சன் 43 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஜார்ஜ் பெய்லி (1 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 97 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் பிராட் ஹாடின்– ஸ்டீவன் ஸ்மித் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேர்த்தனர். ஹாடின் 75 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஜான்சன் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

சிறப்பான ஆடிய ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார். இது அவருக்கு 3–வது சதம் ஆகும். ஆஸ்திரேலியா அணி 72 ஓவரில் 300 ரன்னை கடந்தது. அப்போது அந்த அணி 7 விக்கெட்டை இழந்து இருந்தது. சதம் அடித்த சுமித் 115 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்னில் சுருண்டது.

ஆஷஸ் வரலாற்றில் மூன்றாவது முறையாக 5-0 வென்று இங்கிலாந்தை துரத்துகிறது ஆஸ்திரேலியா, ஐந்தாவது தொடர்ச்சியான டெஸ்ட் அணியை மாற்றாமல் உள்ளது ஆஸ்திரேலியா .ஆல் ரவுண்டர் வாட்சன் (இடுப்பு) பின்னர் மற்றும் இஷாந்த் ரியான் ஹாரிஸ் (முழங்கால்) விளையாட அனுமதிக்கப்படவில்லை.

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!



உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!

இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்.

2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்).

3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்).

4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்).

5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி).

6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்).

7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி).

8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி).

9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு).

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்..

1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்

பெண் அதிகாரிகள்..


அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப்பட்டாள்.

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட் ..



தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட் ..

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது -முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை

தேங்காய் எண்ணெயே கலப்படம் தானா ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணெயே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணெயின் விலை கூடுவதில்லை. பின் எப்போது தான் கூடுகிறது ? கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது.

கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?


பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..

கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை, ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை, எல்லாவிதாமான லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?


தோல் வறண்டு போகும் முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் முடி கொட்டும். முடி சீக்கிரம் வெள்ளையாகும் அரிப்பு வரும். ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது.

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும்.. கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை...

அதுவே, தியானம்..!




தினமும் உறங்குகிறோம் நாம், தூக்கமே இல்லாமல் வாழவே முடியாது. அதாவது கண்டிப்பாக இந்த உடலுக்கு "ஓய்வு" தேவை. ஓய்வு அவ்வளவு முக்கியதானது. நாம் வெறுமனே அமர்ந்து இருந்தாலும் அல்லது படுத்து தூங்கினாலுமே கூட சக்தி விரயமாகிறது, அதாவது உடல் உழைக்கிறது. காரணம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் சக்தி தேவை. அதுவும் தூங்கும் போது தான் அதிக எண்ணங்கள் மனதில் அலைபாயுகின்றன.

ஆக, நம்முடன் நம் ஆயுள் வரை வரும் உடலை நாம் காக்கின்றோம் ஆனால் மனதிற்கு எப்படி ஓய்வு கொடுப்பீர். அது கூட ஓய்வு பெற்றால் தான் புத்துணர்ச்சியுடன் விளங்கும். மேல் மனதில் வினாடிக்கு 2 ஆயிரம் எண்ணங்களும், உன்னை அறியாமல் அடி மனதில் வினாடிக்கு 4 கோடி எண்ணங்களும் (குறைந்தபட்சம்) பரிசீலிக்கபடுகிறது.

அப்படிபட்ட மனதிற்கு ஓய்வு கொடுத்தால் எவ்வளவு நன்றாக வேலை செய்யும், சரி காலாகாலத்துக்கும் உன்னிடம் பயணிக்கும் அற்ப உடலுக்கு ஓய்வு தருகிறாய், மனதிற்கு? மனதிற்கு ஓய்வு அளிப்பது என்றால் என்ன தெரியுமா..?!

அதுவே, தியானம்..!

இப்படியும் பெண்கள்...!



கணவரின் சிகிச்சைக்கு பரிசுப்பணத்தை சேகரிப்பதற்காக 3 கி.மீ. ஓட்டப்போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற 61 வயது பெண் ...?

மூன்று கிலோமீற்றர் வீதியோட்டப் போட்டியில் 61 வயதான பெண்ணொருவர் முதலிடம் பெற்ற சம்பவம் இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சேலை அணிந்த நிலையில் வெறுங்காலுடன் இப்பெண் ஓடி முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தின், பராமத்தி நகரில் நடைபெற்ற பராமத்தி மரதன் எனும் போட்டியில் இப்பெண் முதலிடம் பெற்றுள்ளார்.

தனது கணவரின் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பரிசோதனைக்கு பணம் தேவைப்பட்ட நிலையில,; இந்த மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 5000 இந்திய ரூபா பரிசு வழங்கப்படும் எனக் கேள்விப்பட்டவுடன் இப்போட்டியில் பங்குபற்ற லதா பக்வான் கரே எனும் இப்பெண் தீர்மானித்தாராம்.

இவருடன் போட்டியில் பங்குபற்றிய ஏனையோர் பயிற்சிப் பெற்ற ஓட்டப் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலையொன்றை அணிந்துகொண்டு வெறுங்காலுடன் ஓட்டக்களத்தில் வந்து நின்ற தன்னைப் பலரும் வித்தியாசமாகப் பார்த்ததாக லதா பக்வான் கரே கூறுகிறார். ஆனால், போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஒவ்வொருவராக முந்தத் தொடங்கினார்.

இறுதியில் முதலிடத்தைப் பெற்று பராமத்தி மரதன் ஓட்டப்போட்டியின் அதிவேகமான நபர் என்ற பெயரையும் தட்டிக்கொண்டார் அவர். லதா பக்வான் ஓட ஆரம்பித்ததையே வித்தியாசமாக பார்த்தவர்கள் அவர் முதலிடம் பெற்றதை அறிந்து பெரும் வியப்படைந்தனர்.

பண்ணையொன்றில் தொழிலாளியாக பணியாற்றுபவர் லதா பக்வான். இது குறித்து லதா பக்வான் கரே கூறுகையில், 'இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்காக நாம் 15,000 - : 20,000 ரூபாவை திரட்ட வேண்டும்.

எனது அயலவர் ஒருவர்தான் இந்த மரதன் போட்டி குறித்த தகவலை எனக்குத் தெரிவித்தார். இதில் கிடைக்கும் பரிசுப்பணம் மூலம் எனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என மற்றொரு அயலவர் தெரிவித்தார். அதனால் நான் இப்போட்டியில் பங்குபற்றத் தீர்மானித்தேன்.

எனது மகனிடம் இவ்விருப்பத்தை தெரிவித்தபோது, எனது வயதை கருத்திற்கொண்டு அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். இது சாத்தியமில்லாத செயல் என அவர் எண்ணினார். ஆனால் நான் உறுதியாக இருந்ததால் இறுதியில் அவர் சம்மதித்தார். போட்டியில் ஓடும்போது நான் வெற்றி பெற வேண்டும் என எனக்கு நானே கூறிக்கொண்டேன்' என்றார்.

புல்தனா எனும் இடத்திலிருந்து 3 வருடங்களுக்குமுன் தொழில் தேடி பிம்பிலி எனும் கிராமத்துக்கு இவரின் குடும்பம் இடம்பெயர்ந்தது. ஆனால் அங்கும் நல்ல தொழில் எதுவும் கிடைக்கவில்லை. பண்ணையொன்றில் பணியாற்றி 80 - 100 ரூபாவை சம்பாதித்தார் இவர்.

இந்த ஓட்டப்போட்டிக்குமுன் தினமும் காலையில் காலையில் தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்வாராம் லதா பக்வான். ஆனால் ஒருபோதும் ஓடியதில்லை. 'நான் ஓடினால்' மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். சங்கடமான கேள்விகளைக் கேட்பார்கள்' என என்கிறார் அவர்.

போட்டி ஏற்பாட்டாளரான சச்சின் சதாவ் கூறுகையில், 'பராமத்தி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் தடவை என்பதால் நாம் சிறிய அளவில் 4 பிரிவாக இப்போட்டியை நடத்தினோம். லதா பக்வான் சிரேஷ்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் பங்குபற்றினார். இது 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட போட்டி. ஏனைய போட்டியாளர்கள் முழுமையான தயார் நிலையில் ஓடினார். ஆனால் லதா கரே முதல் தடவையாக ஓட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிய நிலையிலும் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாமிடம் பெற்றவர் அவரைவிட 2:3 நிமிடங்கள் பின்னால் இருந்தார். முறையான ஆடையோ பயிற்சியோ இன்றி லதா பக்வான் வெற்றிபெற்று ஆச்சரியமளித்துள்ளார்' என்றார்.

லதா பக்வானின் மகன் சுனில் கருத்துத் தெரிவிக்கையில், 'எனது தாயார் உடற்திடமானாவர் என்பது தெரியும். நானும் அவருக்குத் துணையாக ஓட நினைத்தேன். ஆனால் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக என்னால் பங்குபற்ற முடியவில்லை.

ஆனால், போட்டிக்கு முதல்நாள் இரவு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் இந்த போட்டியில் பங்குபற்றும் திட்டத்தை மறந்துவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் காலையில் குளிசையொன்றை அருந்திவிட்டு என்னிடமும் கூறாமல் சென்றுவிட்டார். அவர் வெற்றிபெற்றதை பின்னர்தான் அறிந்தேன்' என்றார்.

'எனது கணவரின் சிகிச்சைக்காகவும் குடும்பத்துக்காகவும்தான் நான் ஓடினேன். சமூகத்திடமிருந்து சில உதவிகளை நான் எதிர்பார்க்கிறேன். எனது மகனுக்கு ஒரு வேலை வேண்டும். அப்போது எமது குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும்' என லதா பக்வான் தெரிவித்துள்ளார்.

பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்!




“பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். “என்று குன்னூரில் நடந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்ட விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


நீலகிரி மாவட்டம் குன்னூரில், பொங்கலுக்காக இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்துப் பேசிய முதல்வர்:ஜெயலலிதா பேசும்போது, ”தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஒட்டி, ஆண்டுதோறும் வழங்கப்படும் வேட்டி சேலை திட்டத்தையும்; பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் வழங்கப்படும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை இன்று நான் துவக்கி வைக்க உள்ளேன்.
3 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயனடையக் கூடிய வேட்டி-சேலைத் திட்டத்தினை இன்று நான் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


வரும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் என்ற சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை நான் வழங்கி உள்ளேன். ஏனெனில், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா. என்னைப் பொறுத்தவரை, நேரம் பார்த்து தேவை அறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இது போன்ற உதவிகளை நான் செய்து வருவதால் தான் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் பக்கம் நான் இருக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு உதவி செய்யக் கூடிய இடத்திலே நீங்கள் என்னை வைத்து இருக்கிறீர்கள்.


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆபிரகாம் லிங்கன் அப்போது ஜனாதிபதியாக இருந்தார். சிக்கல் மிகுந்த அந்த வேளையில் ஒரு மூதாட்டி, ஆபிரகாம் லிங்கனை அணுகி அவருக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து ஒன்றைச் சொன்னார். “ஜனாதிபதி அவர்களே, எதற்கும் கவலைப்படாதீர்கள், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்” என்று சொன்னார்.


இதற்கு பதில் அளித்த ஆபிரகாம் லிங்கன், “தாயே உங்கள் அன்பு மொழிக்கு நன்றி. நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய கடமை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதை விட கடவுளின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பது தான் எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது” என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னாராம்.


இதைப் போல, எனது அரசின் மீது அவதூறுகளைப் பரப்பி, பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, மக்களை தங்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்று சிலர் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்று நினைத்தே எனது அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அமைந்துள்ளன. மக்களும் எனது அரசிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ, அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.


பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரே நலம் தான் இருக்கிறது. அது தமிழக மக்களின் நலம். அதனால் தான் என் அன்புக்குரிய மக்களாகிய நீங்கள் எப்பொழுதும் என் பக்கம் இருக்கிறீர்கள். நானும் உங்கள் பக்கம் இருக்கிறேன்.


தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் இன்னும் நிறைய செய்ய வேண்டிய பணிகள் கடமைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால் இந்திய அளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். உங்கள் உறுதுணையோடு அத்தகைய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Windows 8 பிரச்சினைக்கான தீர்வு...



நண்பரே நீங்க விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா?

திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.

இதன் தலைப்பு "Choose an option" என இருக்கும். இதில் "Continue", "Troubleshoot" மற்றும் "Turn off your PC." என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்; அல்லது கிளிக் செய்திடுங்கள். அதன் பின்னர், "Advanced options" என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.

இவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.

ஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும்.

மேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன..?



உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

சமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம்.

பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும். அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும், அடிக்கடி சீயக்காய் போட்டு கூந்தலை கடினமாக தேய்க்கக்கூடாது. மென்மையாகவே கையாள வேண்டும்.

• முடிஉதிர்வதைத் தவிர்க்க அழகு நிலையங்களில் மூலிகைகளால் செய்த ஹெர்பல் ஹேர் பேக், ஸ்பெஷல் ஸ்பா ட்ரீட்மெண்ட், டீப் கன்டிஷனர், சீரம் ட்ரீட்மெண்ட், வாசலின் ட்ரீட்மெண்ட் ஆகிய முறைகள் கையாளப்படுகிறது.

• வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

* இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

* தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...



குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...

காதுகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு எளிய விஷயம் தான். ஆனால் அதுவே குழந்தைகளின் காதுகள் என்று வரும் போது சற்று சிரமமாக மாறி விடுகிறது. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்துவதால் அவர்களின் காதுகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் காதுகளின் மடிப்புகளில் தேங்க வாய்ப்புள்ள செத்த அணுக்களையும் நீக்கும். குழந்தைகளின் காதுகளில் உண்டாகும் வேக்ஸ் எந்த ஒரு தொற்றையும் ஏற்படுத்தாது. மேலும் அது காது கேட்கும் திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. அதனால் பொதுவாக காதுகளில் உருவாகும் வேக்ஸ் ஆபத்தில்லாத ஒரு சாதாரண பொருளாகவே திகழ்கிறது. இது கிருமிகள் மற்றும் அயல் பொருட்களை காதுக்குள் நுழைய விடாமலும் தடுக்கும். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமாக வேக்ஸ் உருவாகும் போது மருத்துவரை அணுகுவது நல்லது. அனுபவமுள்ள மருத்துவர் குழந்தையின் காதுகளில் இருக்கும் வேக்ஸ் மற்றும் அழுக்குகளை பாதுகாப்பாக எடுத்து விடுவார். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த காட்டன் பட்ஸை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. காதுகளை சுத்தப்படுத்தும் முறைகளில் அதிக இடர்பாடு நிறைந்த தேர்வாக அது கருதப்படுகிறது. காதுகளை சுத்தப்படுத்தும் போது தவறு ஏற்பட்டால் அதன் விளைவு பெரிய ஆபத்துக்களில் போய் முடியும். இதனால் தொற்றுக்களும் உண்டாகும். காதுகளை சுத்தப்படுத்த சரியான முறையை கையாளாவிட்டால் செவிச்சவ்வு உடையும் அபாயமும் உண்டு. இதனால் காது கேட்கும் திறனை இழக்கவும் வாய்ப்பு உள்ளது.


                      அதனால் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது கூடுதல் கவனமும் பொறுமையும் கண்டிப்பாக தேவை. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்களை பரிந்துரைத்துள்ளோம். அவைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் உங்கள் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்துங்கள். குளிக்கும் போது சுத்தப்படுத்தவும் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த அதனை குளிப்பாட்டும் வேளையே உகந்ததாக விளங்கும். ஈரத்துடன் இருக்கும் போது குழந்தைகளின் காதுகளை எளிதில் சுத்தப்படுத்தி விடலாம். நீரில் நனைத்த துணியை கொண்டு காதின் வெளிப்புறங்களை துடைத்து கொள்ளவும். அதன் பின் காதுகளின் உட்புற மடிப்புகளை துடைக்கவும். பின் எஞ்சியிருக்கும் வேக்ஸ்களை அகற்றவும். வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைக்கவும் உங்கள் குழந்தையை குளிப்பாட்டும் போது அதன் காதுகளை வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைத்திடுங்கள்.

                     உங்கள் குழந்தையின் காதுகள் சுத்தமாக இருக்க இதனை சீரான முறையில் செய்தாலே போதுமானது. காதுகளில் சேர்ந்துள்ள செத்த அணுக்கள் மற்றும் வேக்ஸ் ஆகியவற்றை இது நீக்கிடும். காட்டன் பட்ஸ் குழந்தைகளின் காதுகளுக்குள் காட்டன் பட்ஸை நுழைக்கவே கூடாது. பொதுவாகவே குழந்தைகளின் காதுகளுக்குள் ஆழமாக எந்த பொருளையுமே நுழைக்க கூடாது. இது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸாகும். இது செவிச்சவ்வை பாதித்து பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.
 
                     காதுகளுக்கான சொட்டு மருந்து குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமான வேக்ஸ் உருவாகியிருந்தால் அதனை நீக்க மேற்கூறிய டிப்ஸ் எடுபடாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் காதுகளுக்கான சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டும். இவ்வகையான சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். சுயமான வழிமுறைகளை தவிர்க்கவும் மருத்துவ ரீதியான வழிமுறையை பின்பற்றாமல் சில பேர் வீட்டு சிகிச்சை முறையை பின்பற்ற கூடும். அப்படி எதையும் முயற்சி செய்யாதீர்கள். அது குழந்தையின் காதுகளை பாதித்து விடலாம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

வறண்டு காணப்படும் நேரத்தில் சுத்தப்படுத்தாதீர்கள்

ஈரப்பதம் இல்லாமல்வறண்டு காணப்படும் நேரத்தில் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்தாதீர்கள். அது சருமத்தில் எரிச்சலையும் சிராய்ப்புகளையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த எப்போதுமே நீரில் நனைத்த துணியையே பயன்படுத்துங்கள். முடிந்த வரை குழந்தையை குளிப்பாட்டி விடும் நேரத்திலேயே காதுகளையும் துடைத்து விடுங்கள்.

கவனமாக இருங்கள்

பொதுவாக காதுகளை சுத்தப்படுத்தும் போது குழந்தைகள் உங்களோடு முழுமையாக ஒத்துழைப்பதில்லை. துடைத்து கொண்டிருக்கும் போது திடீரென அவர்கள் தலையை ஆட்டி விடும் அபாயம் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருப்பதால் விபத்துகளை தவிர்க்கலாம்.

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!




ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.

நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.

நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, ADVERTISEMENT கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.

நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும். இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection. நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை. உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது.

ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை "heuristic" checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.

இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம். அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும். இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?



முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்னென்ன?

‘மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக்கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.


மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.


தகுதிகள்:

இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள்:

கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.


குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.


எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும். பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும். 


பயனை எப்படிப் பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும்.


இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் / cardiology and cardiothoracic surgery

புற்றுநோய் மருத்துவம் /ˆOncology

சிறுநீரக நோய்கள் /‡Nephrology / urology

மூளை மற்றும் நரம்பு மண்டலம் /neurology and neuro surgery

கண் நோய் சிகிச்சை/opthalmology

இரைப்பை (ம) குடல் நோய்கள் /Gastroenterology

ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் /Plastic Surgery

காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள்/E.N.T

கருப்பை நோய்கள்/Gynaecology

ரத்த நோய்கள் / Haematology



மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.


இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.


ஆன்லைனில் தெரிந்துகொள்ள:-

உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும். https://docs.google.com/file/d/1VpMQHGnbQywYPlAxYoW8AFec27t6s6sUNMjAIJdGJUtzluRhC2G9KqJl5aMS/edit



மேலும் விவரங்களுக்கு:

இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
http://www.cmchistn.com/  இத்தளத்திற்குச் செல்லலாம்.

1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.